விண்மீன்கள் எண்ணுகிறேன்

Friday, March 29, 2013

விண்மீன்கள் எண்ணுகிறேன்



விண்மீன்கள் எண்ணும் - என் 
நீண்டகால முயற்சியில் 
பேரூந்தின் ஓரத்தில் - மீண்டும் 
ஒருநாள் விண்மீன்கள் எண்ணுகிறேன் 
நகரும் பேரூந்தின் வேகம் - என் 
கவனம் சிதைக்கவில்லை - இரு 
மின்மினி பூச்சிகளின் 
நெருங்கிய காதல் பறப்பு -என் 
கணிதத்தை சிதைக்க 
விண்மீன்கள் எண்ணுகிறேன் -மறுபடியும் 
முதலில் இருந்து
வீழும்வரை முயலும் முடிவுடன்.

Read more...

முதலாளியும்(MD) அவரது செயலாளரும் (SECY ) 18 +

Friday, June 24, 2011




இது எனக்கு வந்த ஜோக் ஒண்டு!நான் விழுந்து விழுந்து சிரிச்சனான்!
அது இப்ப உங்களிற்கும்!

ஆனா அது ஆங்கிலத்திலையே இருக்கட்டும்!

 

Boss walked into the office one morning not knowing that his zipper was
down..

His secretary walked up to him and asked, "Boss this morning when you left
your house, did you close your garage door?" This was not a phrase that
Her Boss understood, so he went into his Office looking a bit puzzled.

When he was about done with his paper work, he suddenly noticed that his
Zipper was not zipped up. He zipped up and remembering what his Secretary had told
him, finally understood.

He then intentionally went out to ask for a cup of coffee from his secretary. When he
reached her desk,
He said, "When you saw the garage door open did you see my jaguar parked in there?"

The secretary smiled for a moment and said, "No, Boss I didn't. All I saw was a Maruti 800 with 2 flat tires."

Read more...

பேரூந்துச்சிரிப்பு

Wednesday, June 8, 2011





காலைபேரூந்தில்
பல இருக்கை வெறுமையாக இருக்க
ஏன் எனதருகில் அமர்ந்தாய்?!
யாரோ ஒரு பெண் குழந்தையுடன்
முன்னிருக்கையில்-
திரும்பிய குழந்தை எனைப்பார்த்து
"தாத்தா" என்றபோது,
ஏன் அப்படி வெடித்து சிரித்தாய்?!
தமிழில் நினைத்தா??!
இல்லை  சிங்களத்தில்  நினைத்தா???!
#கவலை
(தாத்தா என்றால் "அப்பா"வாம் சிங்களத்தில்)

Read more...

கண்ணாமூச்சிக்கொலை

Monday, January 24, 2011


அலுத்து களைத்து-உறங்கமுற்படுகையில்
வருகிறாள் அவள்!
ஹாய் டா!-பரிட்சயமான குரல்
என்னடி?!-கண் மூடியபடி நான்
இல்லை உன்னுடன் கண் கட்டி விளையாடி
ரொம்ப நாளாகிறது!
ஆமாம் சிறுவயது முதல் அவள்
என் தோழி-யாரவள்?!
களைப்பு-கண் மூடியபடி நான்
ஆனால் அவளும் நானும்
நினைவு தெரிந்த நாள் முதல்
பழகிய உணர்வு
விளையாடுவோமா?-அவள்
அதுக்கென்ன -ஆனால் ஒரு நிபந்தனை
கட்டிலில் மட்டுமே நானிருப்பேன்
தொட்டுவிடும்  தூரத்தில் நீ ஒழி
தொட்டுவிடுவேன்!
சோர்வு-கண்மூடியபடி நான்
இன்னமும் நீ சொம்பேறியடா!
ஆம் அது உண்மைதான்
 "இன்னமும்" தெரிந்து வைத்திருக்கிறாள்
கண்களைக்கட்டவா?-அவள்
செய்வதை செய் வதைக்காதே
தூங்கப்போகும் நேரம்
கண்ணாமூச்சி தேவையா?
அயர்ச்சி-கண்மூடியபடி நான்
எதோ எடுத்தவள் கட்டுகிறாள்
கண்களை இறுக்கி
கட்டி முடித்தவள் காதருகில்
இப்ப ஆரம்பிப்போமா?- என்றவள்
விட்டம் பார்த்து உறங்க நினைத்த
என்மார்பின் மீது உட்கார்கிறாள்
எனது கைகளை அவளது கால்களால்  இறுக்கி
கன்னத்தில் கைவைத்து
எப்படி சுகம்? என்கிறாள்
ஆம் அவள் எனது தோழி
அந்த உடற் சூடு எனக்கு தெரிந்தது
சிறுவயதில் "மானே தேனே கட்டிபுடி"
பாட்டிற்கு என்னுடன் ஆடியவளாக
 இருக்கலாம்!பெயர் உருவம் நினைவில்லை
ரொம்ப வளர்ந்துவிட்டிருக்கிறாள்
அவளது கனம் மூச்சை முட்டுகிறது
சோர்வு குறைந்து நான் அவளிடம்
யார் நீ-என்கிறேன்
"நீ எனக்கு செய்த வேலைக்கு
நான் தருகிறேன் பரிசு"-என்றவள்
கன்னத்தி இருந்த கையை
கழுத்தில் வைத்து இறுக்குகிறாள்
அவளது அழுத்தில்
கத்தமுடியவில்லை!
கொலை செய்கிறாள் எனை!
மரணிக்கிறேன் நான்-
கண்களை மூடியபடி!
கடிசிவரை அவள் யாரென்று
தெரியாமலே!

தொடர்ச்சி ....

மரணித்த எனை விடுவித்து  அவள்
செல்கையில்
விழுந்த எனது கை சுவற்றில் பட்டு
கண்விழித்த நாள்
இன்றுவரை சிந்திக்கிறேன்
கனவில் எனை கொலைசெய்த
தோழி-யார்?

Read more...

யன்னல் கரை சீட்

Tuesday, December 14, 2010

அதுவும் ஒரு வழமையான நாள்தான்!




காருக்குள்ள இருந்தவ கொண்டுவந்த -சாப்பாட்டை
சாப்பிட்டு கை கழுவுவி முடிச்சிப்போட்டா
பார்சல் பேப்பரையும் வெளியிலை எறிஞ்சுபோட்டா!

தையல் கடையிலை ஒருத்தர்
புது துணியை குடுத்து ஜீன்ஸ் தைக்க
அளவு குடுத்து முடிஞ்சிட்டுது!

சின்னா பொடியன் ஒருத்தன்
வாங்கின ஐஸ் கிரீம் முழுதும்
சாப்பிட்டு முடிச்சுப்போட்டான்!

பிச்சைக்காரன் பத்த வைச்ச பீடி -இரண்டு
பத்தி பத்தி ஊதித்தள்ளி முடிஞ்சுபோட்டுது!

கராஜிலை கொண்டுவந்து விட்ட
காத்து போன மோட்டார் சைக்கிள்
ஓட்டுவேலையும் சரியாகிட்டுது!

அழுத பிள்ளையும் பாலை குடிச்சுப்போட்டு
சிரிச்சு விளையாடி பிறகு
நித்திரையாகிபோச்சு!

பக்கத்திலை ஒருத்தி
கொண்டுவந்த புத்தகத்தில்
பாதிக்கு மேல படிச்சிட்டா!


காதுகளிலை மாட்டியிருந்த
ஹெட் செட் இல் கேட்ட fm இல்
கிட்டத்தட்ட மூண்டு பாட்டு
முடிஞ்சுது வளம்பரமும் சேத்து!


அசையாமல் நிக்குது பஸ்
சிவப்பு மஞ்சள் பச்சையும்
கனதரம் மாறிட்டுது!
யாரோ ஒரு வி ஐ பி போறாராம்
ரோட்டிலை!

திட்டுது சனம் அவரை
ஹெலிஹோப்டரிலை போகலாம் எண்டு!

எல்லாம் கேக்குது கொஞ்சம்!
ஆனா  நான் கேக்காதமாதிரி
பாட்டுக்கு மண்டையை ஆட்டியபடி,
ஜன்னல் கரை சீட்டிலை-நான்.

Read more...

இப்பல்லாம் மழை முகிலில்!

Monday, December 6, 2010

அன்னை மடியில் குழந்தை
ஆயிரம் காளான்கள்
இதய உருவம்
ஈட்டிஎறியும் வீரன்
உருவச்சிலைகள்
ஊர்திகள்
எலும்புகூடு
ஏர் பிடித்த உழவன்
ஐயுறு விகாரம்
ஒற்றையடிப்பாதை
ஓடும் ஆறு
ஔடத கலவைகள்

என்ன புரியவில்லையா?
காற்சட்டை காலங்களில்
மழை முகிலில் ரசித்தவை!

இப்பல்லாம் மழை முகிலில் ரசிப்பவை
ஹி ஹி  ஹிஹி !
 கற்பனைக்கு விட்டாச்சு!!

Read more...

2010 இன் no 1 பாட்டு

Monday, January 4, 2010


போன வருஷம் 2009 நான் கேட்ட முதல் பாட்டு "ஊர தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் கண்மணி என் கண்மணி".
 
கேட்ட புண்ணியமோ என்னமோ போனவருசம் முழுக்க ஒரே மாதிரிதான்.
அதாலை இந்த வருசமும் நான் கேட்கிற பாடல் எனது வாழ்க்கையில எதாவது செய்யும் எண்டு நம்பினனான்.
 
 
கொஞ்சம் சின்னப்புள்ளதனமா இருந்தாலும் (இந்த பதிவு) எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பாட்டு.
இது எனது friend  (நண் பன்/பி ) போன் ஐ வாங்கி ringtone ஆக செட்பண்ணி விடிருந்தது.
12  மணிக்கு சரியாக எல்லா நாதாரிகளும் sory நண்பர்களும் call பண்ண திரும்ப திரும்ப இந்த பாட்டு (பாடு) தான்.
எனக்கும் பிடிசிருந்ததாலை அப்பிடியே விட்டிட்டன்,
பாடல் வரிகளில் தமிழ் சுகமாக விளங்கிட்டுது,ஆனால் அந்த ஆங்கிலம் (Blaaze ) சரியாய் விளங்கவில்லை.
அலுவலக நண்பன் ஒருவன் தான் அந்த வரிகளை எடுத்து தந்தான்,
அதை நான் பாடிப்பாத்தால் (English) கோவிலிலை தேவாரம் சொல்லிற மாதிரி இருக்கு(சாமி கண்ணை குத்திடாத).
இந்த பாட்டுக்கு என்னமாதிரி பலன் இந்த வருசத்திலை இருக்கும் எண்டு யாராவது சினி பகவான்ஸ் இல்லாட்டி எனி பகவான்ஸ் இருந்தால் சொல்லுறீங்களா?
 
எனக்கு நித்திரையே போச்சு!!
 
இந்த வருஷம் நான் கேட்ட பாட்டு இதுதான்!
 
 
 
 

 
 

 
 
ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே


Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


அந்த நேரம் அந்தி நேரம் கண் பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே
ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின் திட்டு எல்லாம்
காற்றோடு போயே போச்சே
*Hosaanna* என் வாசல் தாண்டி போனாளே
*Hosaanna* வேறொன்றும் செய்யாமலே
நான் ஆடி போகிறேன் சுக்கு நூரகிறேன்,
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்


Ho... saanna...

வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

Ho... saanna...

சாவுக்கும் பக்கம் நின்றேன்

Ho... saanna...

ஏனென்றால் காதல் என்றேன்

Ho... saanna...


Everybody wanna know be like be like, I really wanna be here with you..
Is that enough to say that we are made for each other is all that is *Hosaana* true
Hosaanna .... be there when you are calling i will be there..
Hosaanna..... be the life the whole life i share..
i never wanna be the same..
its time we re arrange i take a step,you take a step and me calling out to you...

Helloooo... Hellooooo... Helloooo oooo

Hosaanna
Ho.. Hosaanna... Hosaanna..
Ho.... Ho.. Hosaanna... Hosaanna.. Ho... Ho....


வண்ண வண்ண பட்டு பூச்சி பூ தேடி பூ தேடி
அங்கும் இங்கும் அலைகின்றதே
ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக வேகம் ஒன்று வேகம் ஒன்று
எங்கெங்கோ நகர்கின்றதே
*Hosaanna* பட்டு பூச்சி வந்தாச்சா?
*Hosaanna* வேகம் உன்னை தொட்டாச்சா?
கிளிஞ்சலாகிறேன் நான் குழந்தை ஆகிறேன்,
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்ளுறேன்


Helloooo... Hellooooo... Helloooo oooo


*Hosaanna* என் மீது அன்பு கொள்ள


*Hosaanna* என்னோடு சேர்ந்து செல்ல


*Hosaanna* ம்ம் என்று சொல்லு போதும்...


Ho.. Hosaanna..


ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே

ஏன்.. இதயம் உடைத்தாய் நொறுங்கவே
என் மறு இதயம் தருவேன் நீ உடைக்கவே      
 
 
 

Read more...

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP